.சேலம் மாணவரின் விபரீத முடிவு!! நீட்’ மாணவர் தூக்கிட்டு தற்கொலை:


சேலம்   மாவட்டம் மேட்டூர் அருகிலு ள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்கிற விவசாயியின் இரண்டாவது மகன் தனுஷ்.2019ஆம் ஆண்டு 12 வகுப்பு தேர்வை முடித்த அவர் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் இரண்டு 
முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி
பெற இயலவில்லை.

பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் தமது மருத்துவ கனவு தகர்ந்து போகும் என்கிற நினைப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து போய் உள்ளார்.

தனுஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

எந்தஒருபிரச்சினைக்கும்தற்கொலை
தீர்வாகாது மாணவர்கள்இதுபோன்ற செயல்களில் இனிமேலும் ஈடுபடக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கின்றேன். 

தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வுக்கு பயந்து மாணவமணிகள்தற்கொலை 
செய்து கொண்டதற்கு மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். 

தகுதி திறமை என்ற போலித்
தனமான வாதத்தால் தமிழகத்தில் மீண்டும் ஒரு உயிர் பலியாகக்கூடாது
என்று மனித நேய கட்சி தலைவர் 
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

Pakistan violates LoC ceasefire in Kashmir, Army retaliates

Recommendation to impose a fine of Rs. 2000 on shops and establishments that do not display nameplates in Tamil

The real strategy behind Russia’s sudden truce announcement