சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் ; கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு வருகின்ற 04-12-2022 அன்று எழுத்துத் தேர்வு

                                                                               

மாவட்ட ஆட்சித்தலைவர்  கார்மேகம் அவர்கள் தகவல்.சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிட ங்களுக்கு வருகின்ற 04-12-2022 அன்று எழுத்துத் தேர்வு நடை பெறவுள்ளது.

சேலம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வருகின்ற 04.12.2022 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்ட  வருவாய்  அலகில் காலியாக உள்ள 119  கிராம உதவி யாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர் கள்   மூலம்      விண்ணப்பங்களை கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும்முன்னாள் படைவீரர் நல அலுவலகம்  மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப் பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகின்ற 04/12/2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது

இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண் / மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். 

அதன் மூலம் அனுமதிச் சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணைய தள முகவரியான https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 

என்ற இணைய தளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், கைப்பேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி  சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



Comments

Popular posts from this blog

Salem District Collector Brindadevi personally inspected the various development projects during a press tour on 12.11.2024.

Sunita Williams steps out on spacewalk after seven months in orbit

Bomb threat to Tamil Nadu's Erode schools declared hoax