பக்ரீத் 2023: நண்பர்கள் மற்றும் சொந்தங்களுக்கு அழகிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்


இஸ்லாமியர்களின் முக்கியமான புனித நாட்களில் ஒன்றாகவும், பண்டிகைகளில் ஒன்றாகவும் கொண்டாடப்படுவது ஈத் அல் அதா, ஈகை திருநாள், குர்பானி பெருநாள் என பல பெயர்களால் அழைக்கப் படும் பக்ரீத் பண்டிகையாகும். 
இந்த நாளில் இஸ்லாமிய பெருமக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புக்களையும், வாழ்த்துக் களையும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.பக்ரீத் பண்டிகை அன்று குர்பானி கொடுத்து, சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது இஸ்லாமியர்களின் கடமையாக திருக்குரானில் சொல்லப்பட்டுள்ளது. 
இந்த நாளில் புனித மெக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்வதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் பல வற்றில் பக்ரீத் பண்டிகை ஜூன் 28 ம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் ஜூன் 29 ம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இப்ராஹீம் அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து, போற்றும் திருநாளே பக்ரீத் பண்டிகையாகும். கருணை, தியாகம், இரக்கம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உணர்த்துவதே ஈகை திருநாளின் முக்கிய நோக்கமாகும்.
இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரெண்டாவது மாதத்தில் வரும் பத்தாவது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. 

பிறை தெரிவதன் அடிப்படையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படுவதால் பல நாடுகளில் பக்ரீத் கொண்டாடப் படும் தேதியும், நேரமும் மாறுபடுகிறது. 

இந்தியாவில் ஜூன் 29 ம் தேதியே பக்ரீத் கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

Tamil Nadu government orders reduction in prices of M sand, B sand, gravel

National Press Day:Importance, significance and history of the day

“Make in India” is the right time - PM Modi… Commemorative stamps of five film legends released… WAVES Summit 2025…