கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்கள்

                                                                     
சேலம் மாவட்டத்தில் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்கள் செயல்பட்டுவருகின்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தகவல்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரங் களை அறிய அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் அவர்கள் இன்று (19.09.2023) ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்த 15/09/2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. 

இத்திட்டத்தில் கள ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத்தொகை செலுத்தப்பட்டு, கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தற்கான காரணம் மற்றும் சந்தேகங் களை போக்கும் வகையில் உதவி மையங்கள் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் அவர்களது கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது. குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வாயிலாக மேல்முறையீடு செய்யலாம். 
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரம் அறிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களைத் தொடர்புகொள்ளலாம். 

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்ப தாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், தகுதியானவர்எனக்கருதும்பட்சத்தில் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர் மூலமாகவோ மேல்முறையீடு செய்யலாம். 

அதன்படி, மேல்முறையீடு செய்யப் பட்ட விண்ணப்பங்கள் 30 நாட்களுக் குள் தீர்வு காணப்படும். 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உரிய தகவல்களை வழங்கிட அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலக ங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மையங்கள் மூலம் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்ட தொடர் 
புடைய அலுவலர்கள் உடனிருந்தனர் 
என்பது குறிப்பிடத் தக்கது.



Comments

Popular posts from this blog

Salem District Collector Brindadevi personally inspected the various development projects during a press tour on 12.11.2024.

Sunita Williams steps out on spacewalk after seven months in orbit

Bomb threat to Tamil Nadu's Erode schools declared hoax